பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி, இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி, இளம் தாயார் மீதும் அவரது கணவர் உள்ளிட்டவர்கள் மீதும் சுன்னாகம் பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அம்பலாங்கொடை, ஊரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கடந்த காலங்களில் பாரிய கொலைகளை நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
7ஆவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் உயரிய குழு இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இந்த விஜயத்தின் அடுத்த கட்ட கடன வசதி குறித்து அரச தரப்பினருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீனாவால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதி உதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்தியா, தமிழகம் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து 9 பேர் இந்திய நாட்டுப்படகு மூலம் நேற்று (09) மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் நாட்டுப் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள் திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்த அறுகம்பை பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார். அப்பகுதியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கண்டி பல்லேகல பிரதேசத்தில் வீடொன்றினுள் சந்தேகத்திற்கிடமான வகையில் தரித்து வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. ஜீப்பை சோதனை செய்ததில், அது பதிவு செய்யப்படவில்லை என்பதும், செசி மற்றும், என்ஜின் இலக்கங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Read the rest of this entry »November 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
Read the rest of this entry »November 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
தென் கொரியாவின் ஜெஜு தீவில் வெள்ளிக்கிழமை மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் இரண்டு பேர் உயிரழந்துள்ளதுடன், 12 பேர் காணமால் போயுள்ளனர். 129 தொன் எடையுள்ள படகு கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு கடலில் மூழ்குவதாக முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து, அருகிலுள்ள மற்றொரு படகு எச்சரிக்கையை எழுப்பிய நிலையில், மீட்பு நடவடிக்கையை ஜெஜூ தீவின் கடலோர காவல்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
Read the rest of this entry »November 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
எதிர்வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என ட்விட்டர் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கு தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
Read the rest of this entry »November 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
பதுளை மாவட்டத்தின் நேற்று வெள்ளிக்கிழமை (08) பெய்த கடும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
Read the rest of this entry »November 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
இணையவழி ஊடாக பண மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகளால் நாரஹேன்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
November 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read the rest of this entry »