வவுனியா குருமண்காட்டு பகுதியில் உள்ள சிறீ-ரெலோ காரியாலயத்தில் இருந்த வின்சன், கொன்சன் மற்றும் குணா என்பவர்களை வவுனியா பொலிசார் இன்று (மார்ச். 04) காலை விசாரணை செய்துள்ளனர். வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த கந்தசாமி கதிரேசன் என்பவரின் மகளுக்கு சொந்தமான வான் ஒன்றை இருசாராரும் கையெழுத்திட்ட ஒப்பந்த மூலம் வாடகைக்கு பெற்று சிறீ-ரெலோ பாவித்து வந்துள்ளனர். அதற்குரிய மாத வாடகையை கடந்த இரு மாதங்களாக உரிய நேரத்தில் செலுத்தியும் உள்ளனர். இந்த வாகன ஒப்பந்தம் குறித்த விசாரணைக்காக அவர்களை வவுனியா பொலிசார் அழைத்துச் சென்றனரே அன்றி, நெருப்பு இணையம் வெளியிட்ட செய்தியான ‘35 இலட்சம் ரூபா கப்பம் வாங்க முற்பட்டபோது பொலிஸாரால் கைது’ என்பது அப்பட்டமான பொய்யாகும். Read the rest of this entry »













