20,000 ஐ நெருங்கும் கொரோனா தொற்றாளர்கள்

இந்நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,000 ஐ நெருங்கியுள்ளது. நேற்றைய தினம் 491 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இலங்கையில் 19,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றை தினம் இனங்காணப்பட்டவர்களுள் 487 பேர் மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையவர்களுள் இத்தாலியில் இருந்தும் மூவரும் துருக்கியில் இருந்து வந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply