21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் மற்றுமொரு பயணக் கட்டுப்பாடு அமுல்

21 ஆம் திகதி 11 மணிமுதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

மீண்டும் 25 ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாளாந்தம் இரவு 11 மணி முதல் காலை 04 மணி வரை விதிக்கப்பட்ட இரவு நேர பயண கட்டுப்பாடுகள் இன்று முதல் மே 31 வரை தொடரும் என்றும் அவர் கூறினார்.

கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்டதைப் போலவே இந்த வார இறுதியிலும் நாடளாவிய ரீதியாக குறித்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply