யாழ். குடாவில் சதொச விற்பனை நிலையம் இன்று அங்குரார்ப்பணம்

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கும் நோக்குடன் மூன்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களை அங்கு (சதொச) அமைக்க வர்த்தக நுகர்வோர் அமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாவது கூ. மொ. வி. நிலையம் யாழ். வின்சர் திரையரங்கில் இன்று (28) காலை திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன, சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சதொச தலைவர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

யாழ். குடாவில் அத்தி யாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க துரித மாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்ப ட்ட அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார். இதன்படி அங்கு கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற் றும் ஏனைய பொருட்கள் வழங்குவதற்காக கூ. மொ. வி. களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு கூ. மொ. வி களும் விரைவில் திறக்கப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply