மகிந்த ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். ஆனால் அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இன்னும் இலங்கையில் தான் உள்ளனர்.

அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்தனர். இந்நிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நாட்டைவிட்டுச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக இன்று பொறுப்பேற்றார். ஜூலை 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply