டெல்லியில் நடந்த சோகம் மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தொழிலதிபர் தற்கொலை
தலைநகர் டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியை சேர்ந்த ஆயத்த ஆடை தொழிலதிபர் இஷார் அகமது (40). இவரது மனைவி ஃபரீன். இந்த தம்பதிக்கு யாஷிகா (13), இனயா (4) என இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், இஷார் கடன் தொல்லை, மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ள இஷார் நேற்று மதியம் தனது மனைவி, மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் தன்னை தானே சுட்டு இஷாரும் தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply