ஜேர்மனியில் ரூ. 85 ஆயிரம் கோடி மதிப்பிலான கொக்கைன் பறிமுதல்

ஜேர்மனியில் ரூ. 85 ஆயிரம் கோடி மதிப்பிலான கொக்கைன் (cocaine) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொலம்பிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் 39 மெட்ரிக் டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டதாக Dusseldorf நகரில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதன் மொத்த மதிப்பு 2.78 பில்லியன் டொலர் ஆகும். இது இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 85,000 கோடி ரூபா ஆகும். ஹாம்பர்க் (Hamburg) துறைமுகத்தில் 27.5 டன், ரோட்டர்டாம் (Rotterdam) துறைமுகத்தில் 8.8 டன் மற்றும் கொலம்பியாவில் 3.3 டன் கொக்கைன் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஜேர்மன், அஜர்பைஜான், பல்கேரியன், மொராக்கோ, துருக்கிய மற்றும் உக்ரைன் பிரஜைகள் அடங்குவர் என்று வழக்கறிஞர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் தனியுரிமை விதிகளுக்கு ஏற்ப அவர்களின் அடையாளங்கள் வழங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு பாரிய அளவில் கோகோயின் கடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, மேற்கு ஜேர்மானிய மாநிலமான நார்த் ரைன்-வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், போக்குவரத்துகளை சட்டப்பூர்வமாக்குவதற்காக 100 லெட்டர்பாக்ஸ் நிறுவனங்களை நிறுவியது கண்டுபிடிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply