எந்த வேட்பாளருக்கும் 50 வீத ஆதரவில்லை : இரண்டாம் சுற்றில் ஈரான் ஜனாதிபதி தேர்தல்

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 வீத வாக்குகள் கிடைக்காததை தொடர்ந்து தேர்தல் இரண்டாம் சுற்றிற்கு தள்ளப்பட்டுள்ளது. ஐந்தாம் திகதி இரண்டாம் சுற்று வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற தேர்தலில் மிகக்குறைந்தளவான வாக்களித்துள்ளனர் – 1979 இல் இஸ்ரேலிய குடியரசுஸ்தாபிக்கப்பட்ட தேர்தல்களில் இம்முறையே மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்;துள்ளனர்.

சீர்திருத்த வேட்பாளர் மசூத்பெசெக்கியான் தீவிரபழமைவாத வேட்பாளர் மற்றும் அணுவாயுத பேச்சாளர் சயீத் ஜலீல் இருவருக்கும் அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன எனினும் இரு வேட்பாளர்களும் 50 வீத வாக்குகளை பெற தவறியுள்ளனர்.

மசூத்பெசெக்கியானிற்கு 42.5வீத வாக்குகளும் ஜலிலிக்கும் 38 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன. வாக்களிக்க தகுதியான 60 மில்லியன் வாக்காளர்களில் 24 மில்லியன் வாக்காளர்கள் மாத்திரமே வாக்களித்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளை 12 பேர் கொண்ட பேரவை மீளாய்வு செய்த பின்னர் இரண்டு வேட்பாளர்களும் மீண்டும் தங்கள் பிரச்சாரத்தினை ஆரம்பிப்பார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply