உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இவ்வாரத்திற்குள் வெளியிடப்படும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரத்திற்குள் வெளியிடும் என எதிர்ப்பாரப்பதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, வெசாக் பண்டிகைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையங்களை கண்காணிப்பதற்கான ஒரு திட்டத்தை பஃப்ரல் (PAFFREL) அமைப்பு ஏற்கனவே தயாரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply