இலங்கை அடைந்த முன்னேற்றம் : ஜனாதிபதியை வாழ்த்திய சர்வதேச நாணய நிதியம்
இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜுவா தெரிவித்தார்.
காணொளி தொழில்நுட்பம் மூலம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய சந்திப்பு குறித்து தனது X கணக்கில் பதிவிடும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
முதலீட்டை ஈர்த்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான சீர்திருத்தங்களின் முக்கியத்துவமும் விவாதிக்கப்பட்டதாக அவர் தனது X கணக்கில் மேலும் கூறினார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply