விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிக்கு டக்ளஸ் அஞ்சலி

யாழ் இந்திய துணைத் தூதரக (Consulate General of India) உள்ளூர் கலாசார உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் இன்று (28) இடம்பெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் டக்ளஸ் தனது இறுதி அஞ்சலி மரியாதையை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் சி. தவராசா, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் தொழில்சார் வல்லுநர்கள் என பலரும் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று முன்தினம் (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் (Consulate General of India) பணியாற்றும் 52 வயதான பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்கள் என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் அவருடன் பயணம் செய்த மனைவி, மகன், மாமனார் ஆகிய மூவரும் விபத்தில் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply