பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 5 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 12 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 400 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply