பிரதமர் ஹரிணி நல்லூரில் விசேட வழிபாடு
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் அவர் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஆலயப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply