ஜனாதிபதி உரிமைச் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லப் போவதில்லை : சந்திரிகா

ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு, அத்தகைய எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.இதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மற்ற முன்னாள் ஜனாதிபதிகளுடன் சேர்ந்து, ஜனாதிபதி உரிமைச் சட்டத்தை இரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தொடர்புடைய தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply