மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 21 சாரதிகள் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 21 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 16 பேரும், சந்தேகத்தின் பேரில் 736 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 271 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 194 பேரும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 27 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4523 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply