இந்தியாவில் கடற்கரை பராமரிப்பு ரொம்ப மோசம் இலங்கை கடற்கரை சூப்பர்: பிரான்சில் வசிக்கும் இந்திய பெண் ஆதங்கம்
சுற்றுலா சென்ற இடத்தில் வெளிநாட்டு கடற்கரையின் தூய்மையை கண்டு இந்திய பெண் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்தியரான மெஹைக் என்பவர், சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா சென்றார். அங்குள்ள கடற்கரைகளை பார்வையிட்ட அவர், அதன் தூய்மையைக் கண்டு வியப்படைந்ததுடன், இந்தியாவுடன் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இலங்கை நாடு என்னை சங்கடப்பட வைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஒரு சிறிய நாடு தங்களது கடற்கரைகளை மிகத் தூய்மையாக வைத்துள்ளது. அங்கு ஒரு பிளாஸ்டிக் பாட்டிலோ அல்லது குப்பைகளோ கூட கண்ணில் படவில்லை. ஆனால், அதிக வளங்களும் பெரிய பொருளாதாரமும் கொண்ட நமது இந்தியாவில் கடற்கரைகளை ஏன் தூய்மையாக பராமரிக்க முடிவதில்லை? நான் இந்தியாவை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடவில்லை. நம்மைப் போன்ற ஒரு வளரும் நாட்டுடன் தான் ஒப்பிடுகிறேன். இதற்கு நாம் என்ன காரணம் சொல்லப் போகிறோம்? பணமில்லாதது காரணமல்ல என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply