கப்பல் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது அமெரிக்கா ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடங்கியது: மீண்டும் போர் மூளும் அபாயம்; மத்திய கிழக்கில் கடும் பதற்றம்

ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்வதையும், வெளியேறுவதையும் தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை திட்டமிட்டபடி நேற்று மாலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து துறைமுகங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் மிரட்டி உள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த நிலையில், 40 நாள் சண்டைக்குப் பிறகு கடந்த 8ம் தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

இதில் நிரந்தரமாக போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் முன்னிலையில் இஸ்லாமபாத்தில் அமெரிக்கா-ஈரான் பிரதிநிதிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஈரானுக்கு சட்டவிரோதமாக கட்டணம் செலுத்தும் எவருக்கும் திறந்த கடலில் பாதுகாப்பான பயணம் அமையாது எனவும் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களில் ராணுவ உத்தரவுகளை பிறப்பிக்கும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் நேற்று விடுத்த அறிவிப்பில், ‘‘திங்கட்கிழமை (ஏப்.13) காலை 10 மணியில் இருந்து (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து ஈரான் துறைமுகங்கள் உட்பட கடலோர பகுதிகளில் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் எந்த பாரபட்சமின்றி தடுத்து நிறுத்தப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply