சரத் பொன்சேகாவுக்கு சிறையினுள் போதிய பாதுகாப்பு : அமைச்சர் டியூ குணசேகர
சிறைச்சாலைக்குள்ளும், நீதிமன் றம் சென்று வருவதற்கும் சரத் பொன்சேகாவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள், புனர்வாழ்வு அமைச்சர் டியூ குணசேகர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க சபாநாயகரின் அனுமதியைப் பெற்று எழுப்பிய கவனயீர்ப்பு கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது விடயமாக அமைச்சர் மேலும் கூறுகையில் சிறைச்சாலை யிலிருந்து நீதிமன்றத்திற்கு சரத்பொன்சேகா சென்று வர போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன.
இது விடயமாக பிரதி பொலிஸ் மா அதிபருடன் கலந்து ரையாடி நடவடிக்கை எடுத்துள்ளேன். சிறையில் எல்லாக் கைதிகளும் ஒரே மாதிரியாகவே நடாத்தப்படுவர்.
ஐ.தே.க. ஆட்சி காலத்தில் நான் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது ஒழுங்கு முறையாக உணவு வழங்கப்பட வுமி ல்லை. உறவினர்கள் என்னைச் சந்திப்பதற்கும் கூட இடமளிக்கப்பட வில்லை. ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply