உலகெங்கும் இன்று புனித வெள்ளி அனுஷ்டிப்பு

இன்று இயேசு பாடுபட்டு மரித்ததை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமை இன்று அனைத்துலக கிறிஸ்தவ, கத்தோலிக்கத் திருச்சபையானது இயேசு பாடுபட்டு மரித்ததை நினைவுகூரும் பெரிய வெள்ளிக்கிழமை தினத்தை அனுஷ்டிக்கின்றது. இறை சித்தத்தை ஏற்று இயேசு தாம் பாடுபட்டு, சிலுவை சுமந்து கல்வாரியில் உயிர்விட்ட அந்தத் துயர சம்பவத்தை நாம் நினைவுகூருகின்றோம். இறைமகன் இயேசு மனுக்குலத்தின் மீட்க கல்வாரி மலையில் தம்மையே பலியாக்கினார்.

இயேசுவின் திருப்பாடுகளை நம் மனக்கண் முன் நிறுத்தி, நமது பாவங்களுக்காக வருந்தவும், மனந்திருந்தி வாழவும் மீட்பைப் பெறவும் அழைப்பதுதான் இன்றைய முக்கிய தேவையாக இருக்கின்றது.

கிறி]துவே இந்த உலகின் ஒளி. இதற்கு சாட்சியாகவே வாழ்ந்து தன்னையே அர்ப்பணித்தவர் இறைமகன் இயேசு. இயேசுவின் திருப்பாடுகளைத் தியானிக்கும் நாம் அவர் காட்டிய பாதையில் வாழ்கின்றோமா? இல்லையே. இன்னுமின்னும் பாவக் செய்கின்றோம். அவரது சுமையை மென்மேலும் அதிகரிக்கின்றோம்.

இன்றைய நாளிலே இயேசுவின் திருப்பாடுகளையும் மரணத்தையும் தியானிக்கும் நாம் சிலுவையின் மறை உண்மைகளாக வாழ உறுதி கொள்வோம்.

நாம் மனிதம் மிக்கப் புனிதர்களாக வாழ்ந்தால் தான் எம் பாவங்களுக்காக ஜீவ பலியான இயேசுவின் திட்டமும் நிறைவேறியதாக இருக்கும், இருக்கவும் வேண்டும்.

இறைவனுக்கு உகந்த மக்களாக வாழும் வரம்வேண்டி இன்றைய வழிபாடுகளில் தூய மனதோடு இணைவோம், இறைவன் சித்தப்படி வாழ்வோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply