இலங்கையில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்டறிய சுவிட்சர்லாந்து
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பெடரல் காவல்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
26 பேரிடம் குறித்த அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சட்டத்தரணிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
சுவிட்சர்லாந்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து 120சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பணம் பயன்படுத்தியும், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ம் திகதி முதல் 12ம் திகதி வரையில் இந்தக்குழுவினர் இலங்கையில் விசாரணைகளை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த விசாரணைகளுக்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட உள்ளதாக சுவிஸ் அரசாங்கஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனரா என்பது குறித்தும் விசாரணைநடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply