திவிநெகும சட்ட மூலம் குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

திவி நெகும சட்டமூலம் இலங்கை யின் அரசியல் சாசனத்திற்கு ஏற்புடைய முறையில் அமைந்திருக்கின்றதா? என்பது பற்றி தீர்மானம் எடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் கூடிய போது சொலிசிட்ட ஜெனரல் யூ.விஜேயதிலக, கமநல சேவை திருத்த சட்ட மூலத்தை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் மார்க் பெர்னான்டோ, நீதியரசர் அமரசிங்க மற்றும் நீதியரசர் வடுகொடபிட்டிய ஆகியோர் அளித்த தீர்ப்பை மேற்கோள்காட்டினார்.

நீதியரசர் மார்க் பெர்னான்டோ தலைமையிலான உச்ச நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது.

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை இப்போது கலைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி ஒருவர் சகல மாகாண சபைகளுக்கும் பொருத்தமான முடிவையே எடுக்க வேண்டும்.

அவ்விதம் செய்யாவிட்டால் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது. கலைக்கப்பட்ட மாகாண சபையை முதலில் மீள்செயற்படுத்த அல்லது அதற்கு உயிரூட்டாவிட்டால் சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது.

ஆயினும் ஒவ்வொரு மாகாண சபை என்று குறிப்பிட்டு இருக்கும் போது பதவியில் இருக்கும் ஒவ்வொரு மாகாண சபையையுமே இந்த தீர்ப்பு குறிக்கின்றது. அதற்கமைய கலைக்கப்பட்ட மாகாண சபையைப் பற்றி சம்பந்தப்படுத்துவது அவசியம் இல்லை.”

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply