விடுதலைப் புலிகள் மீதான தடை வழக்கு! 3ஆம் திகதி இறுதி விசாரணை
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி நடத்தப்பட்டு வரும் மக்கள் தீர்ப்பாயத்தின் இறுதி விசாரணைகள் நவம்பர் 3 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெறவுள்ளன. இந்த விசாரணையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை கோபாலசுவாமி வாதிடுவார் என்று அந்தக்கட்சியின் சட்டத்துறை செயலாளர் ஜி.தேவதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இறுதியாக மூன்று நாள் தொடர் விசாரணை கடந்த திங்கட்கிழமை முடிவடைந்தது.
இந்த விசாரணைகளில் தமிழக பொலிஸ்துறையினர் உட்பட்ட பலர் சாட்சியமளித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply