ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் புத்தாண்டுச் செய்தி
சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் பாரிய முன்னேற்றங்களை அடைந்த நாடாகவும் பல்வேறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த ஒரு நாடாகவும் நாம் இந்த புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறோம்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, அதேபோன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மக்க ளின் நம்பிக்கையை வென்ற ஒரு தேசமாகவும் நாம் இப் புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கிறோம்.
எனவே, இன்று பிறக்கும் இப்புத் தாண்டில் எமது தாய்நாடு ஜனநாயகம், மக்கள் மத்தியிலான சமத்துவம் மற்றும் அபிவிருத்தி அம்சங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்களைக் காணும், இந்த இலக்குகளை அடைந்து கொள்வதில் எல்லா சமூகத்தினரும் பொது நோக்கத்துடன் ஒன்றுபடுவர் என்பது எனது நம்பிக்கை யாகும்.
பிறக்கும் 2013ம் ஆண்டில் எமக்கு முன்னாலுள்ள எல்லாப் பணிகளிலும் திடவுறுதி, அர்ப்பணம் மற்றும் தைரியத்துடன் உயர்ந்த வெற்றிகளை அடைந்திட எனது நல்லாசிகள். இவ்வாறு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply