மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – TNA
மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார்.வடக்கு கிழக்கு மாகாணங்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய ஏற்கனவே இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் கமரூனின் யாழ்ப்பாண விஜயத்திற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்த போதிலும் வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஏற்கனவே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய விருப்பம் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply