நீதி மற்றும் சமாதான அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

நீதி மற்றும் சமாதான அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 117 வாக்குகள் வித்தியாசத்தில் ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.126 வாக்குகள் ஆதரவாகவும், 9 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்குகளை பதிவு செய்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு ஆகியன நீதி மற்றும் சமாதான அமைச்சிக்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்ற தருணத்தில் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் அஜித் குமார மாத்திரம் சபையில் இருந்துள்ளார். இதேவேளை, பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீடும் 117 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply