ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு சுதந்திரக் கட்சி பாதுகாக்கப்பட வேண்டும்: ரணில்

ராஜபக்சவின் அரசாட்சி தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தக்கருத்தை நேற்று வெளியிட்டார்.ரயில்வே ஊழியர்களின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரை ராஜபக்ச அரசாங்கமே தோற்கடிக்கப்பட வேண்டும்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோற்கடிக்கப்படக்கூடாது. அது ஜனநாயகத்தை பாதுகாக்கும் கட்சியாக திகழ வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.

வழமையாக கட்சி ஒன்று நாட்டில் இரண்டு தவணைகளுக்கு மேல் ஆட்சி செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply