அமைச்சர் மங்கள நாளை பெல்ஜியம் பயணம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய ஆணைக்குழுவை சந்திப்பதற்காக நாளை திங்கட்கிழமை பெல்ஜியத்தின், ரஸல்ஸ் நகருக்குச் செல்லவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இலங்கையிலிருந்து மீன்களைக் கொள்வனவு செய்யக் கூடாது என ஐரோப்பா கடந்த அரசாங்க காலத்தில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.ஐரோப்பிய ஆணைக்குழு விதித்துள்ள இந்த தடையுத்தரவுக்கு எதிரான காரணங்களை நிவர்த்தி செய்து கொள்ளும் வரையில், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்காவது இந்த தடையுத்தரவை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அமைச்சரின் இவ்விஜயத்துக்கான நோக்கமாகும் எனவும் அரசாங்கம் கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply