இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முதல் முறை­யாக எதிர்­வரும் மார்ச் 31ம் திகதி பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முதல் முறை­யாக எதிர்­வரும் மார்ச் 31ம் திகதி பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். அவ­ரது இந்த விஜ­யத்தின் போது சிவில் அணு­சக்தி ஒத்­து­ழைப்பு உள்­ளிட்ட 9 உடன்­ப­டிக்­கைகள் இரு நாடு­க­ளுக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இலங்கை ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரிவு செய்­யப்­பட்ட பின் பாகிஸ்தான் பிர­தமர் நவாஸ் ஷெரிப் தொலை­பேசி ஊடாக அழைத்து வாழ்த்து தெரி­வித்­தி­ருந்தார். ஜனாதிபதி மைத்­தி­ரி­பால வை பாகிஸ்தான் விஜயம் செய்­யு­மாறும் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

அடுத்த மாதம் சீனா செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால, அதன்பின் பாகிஸ்தான் செல்­கிறார். ஜனாதிபதி மைத்­தி­ரி­பாலவின் பாகிஸ்தான் விஜ­யத்தை இலங்­கைக்­கான பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னிகர் எயார் சீப் மார் ஷல் ஜயலத் வீரக்­கொடி உறுதி செய்­துள்ளார்.

தென்­னா­சிய வல­யத்தில் திறந்த பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்ள முதல் நாடுகள் வரி­சையில் இலங்கை மற்றும் – பாகிஸ்தான் திகழ்­வ­தாக ஜயலத் வீரக்­கொடி பாகிஸ்தான் ஊட­கங்­க­ளிடம் கூறி­யுள்ளார்.

எனவே பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல்­து­றை­களில் இரு நாடு­களும் உற­வு­களை வலுப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மைத்­தி­ரி­பால சிறி­சேன பாகிஸ்­தானில் தங்­கி­யி­ருக்கும் போது பிர­தமர் நவாஸ் ஷெரிப், இராணுவ தளபதி ரஹீல் ஷெலிப், ஜனாதிபதி மம்நூன் ஹுசைன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply