வாட்ஸ் அப் மூலம் 11 வயது மகளிடம் பேசிய வாலிபனை அடித்துக் கொன்ற தந்தை

முகமெல்லாம் வீங்கி, கன்னம், மூக்கு, வாய் என்று ரத்தம் ஒழுக உயிருக்குப் போராடும் ஒருவன் சன்னமான குரலில் ”இனிமேல் இப்படி செய்ய மாட்டேன், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்” என்று கதறுகிறான். ”இந்த அடி உனக்குப் பாடம் புகட்டும்” எனும் ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். அதற்குப் பின்பு, கேமரா அந்த ரத்தம் ஒழுகுபவனின் முகத்திலிருந்து நகர, சில நொடிகள் அவனது அலறல் சத்தம் மட்டும் கேட்டபடியே இருக்கிறது.  இணையத்தில் அதிவேகமாக பரவி வரும் இந்த வீடியோவில் உயிருக்கு போராடுபவன் பிரேசிலின் கோயியாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது வாலிபன், அவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் ஒரு 11 வயது பெண்ணின் தந்தை. அந்த வாலிபன் 3 மாதங்களுக்கும் மேலாக சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் அந்த 11 வயதுப் பெண்ணிடம் பேசியுள்ளான். ஆனால் அவன் பேசிக் கொண்டிருந்ததோ அந்தப் பெண்ணின் தந்தையிடம்.

அவனது நாடத்தையால் ஆத்திரமடைந்த அந்த தந்தை அந்த வாலிபனை மூர்க்கத்தனமாக அடித்து அதை தனது கேமராவில் பதிவு செய்து, இணையத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

மூன்று நாள் கழித்து பிரஷ்லேண்ட் என்ற இடத்தின் அருகே அந்த வாலிபன் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply