இந்தியர் இருவர் இலங்கையில் மரணம்
கொழும்பு, வெள்ளவத்தையில் இந்தியர்களான இளம் ஆணினதும் பெண்ணினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹோட்டல் அறை ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் நேற்று இரவு மீட்கப்படடுள்ளன. 28வயதான யுவதியும், 30 வயதான ஆணும் கடந்த 27ம் திகதியன்று இலங்கை வந்து குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தனர். நேற்று முன் தினம் இரவு வேளையில் வெளியே சென்றுள்ள இந்த தம்பதியினர் மீண்டும் பின்னிரவில் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து தமது அறைக்கு சென்றுள்ள அந்த தம்பதியினர் நேற்று மாலை வரை அந்த அறையில் இருந்து வெளியேறாததை அடுத்து சந்தேகமடைந்த நிலையிலேயே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அறையை உடைத்துப் பார்த்த போது இந்தியர்கள் இருவரும் இறந்து கிடந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த தம்பதியர் இரவு நேர களியாட்ட விடுதிகளில் கேளிக்கைகளில் ஈடுபடுவது, கெசினோ விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து அவர்கள் இறுதியாக அருந்தியதாக சந்தேகிக்கப்படும் குளிர்பான போத்தல்கள் இரண்டு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த போத்தல்களில் விஷம் கலந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த தம்பதியர் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் இரண்டும் குறித்த தனியார் ஹோட்டல் அறையிலேயே உள்ள நிலையில் காலை நீதிவான் ஸ்தலத்தை பார்வையிடவுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகளும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply