ராஜிதவுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது : வாசுதேவ நாணயக்கார
பிரதமர் பதவிக்கு ராஜித ஆசைப்படுகின்றார். அதனாலேயே அமைச்சரவையிலும் பொய் சொல்கின்றார் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹிந்த ஆதரவுக் கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர சகல வகையிலான முயற்சிகளையும் எடுப்போம். மஹிந்தவை பிரதமராக்குவதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்றிணைத்து கட்சியை முன்னெடுத்து செல்வது அமைச்சர் ராஜித போன்ற ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. கட்சியில் இருக்கும் முக்கிய இருவரான மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைதிரியை பிரித்து கட்சியை பிளவுபடுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.
அமைச்சரவையின் செய்தியாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன பொய் கூறிவிட்டார். அவரது கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.
அமைச்சர் ராஜித அடுத்த பிரதமருக்கான கனவு காண ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்ற ஆசை அவருக்கும் வந்துவிட்டது என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply