பெற்ற வெற்றியை பாதுகாக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் : சந்திரிகா
புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப கிடைத்த உயரிய சந்தர்ப்பத்தை நாசமாக்க எதிர்வரும் பொதுத் தேர்தல் ஊடாக முயற்சி மேற்கொள்ளும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கட்சியைப் பாதுகாப்பதற்காக முதலில் நாட்டைச் சரி செய்ய வேண்டும். அதனை ஜனவரி 08 ஆம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாப்பது மிக முக்கியமானதென்றும் அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். இதன் பிரகாரம் ஜனவரி 08 ஆம் திகதி நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணம் செய்த சகல சக்திகளுடன் ஒன்று சேர்ந்து சகல தரப்பினரின் பங்குபற்றல் உடன் வெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு ஆளுமையைப் போன்று தியாகமும் பூண்ட சக்திகளுடனும், தலைமைத்துவத்துடனும் ஒன்றுபடுமாறும் அவர் சகல ஸ்ரீல.சு.கட்சியினரைக் கேட்டுள்ளார்.
அதிகார வெறி பொய்யான கற்பனை களைப் பரப்பி சமூகத்தைப் பயங்கர வாதமாக்கும் விஷம் கலந்த சக்திகளை தோற்கடிப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியம் என்றும் அவர் கருத்துத்
தெரிவித்துள்ளார்.
சிறந்த ஆட்சிக்கான தேர்தலில் சகல பிரஜைகளும் ஜனவரி 08 ஆம் திகதி வழங்கிய வெற்றியை முன்கொண்டு செல்லக்கூடிய நாகரிக மிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்தைக் கெளரவமான மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றும் நிறுவனமாக கட்டியெழுப்ப சிந்தித்துச் செயற்படுமாறும் அவர் தமது அறிவித்தலில் கேட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply