ஆப்கானிஸ்தானில் 23 தலிபான்கள் சுட்டுக் கொலை

talipanவடக்கு குண்டூஸ் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 23 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து டோலோ செய்தி நிறுவனம் அளித்த தகவலி படி அபாத் மாவட்டத்தில் குண்டூஸ் மாகாணாத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ராணுவதினர் டோஃபன் தஹம் எனும் ஆப்ரேஷன் நடத்தினர். இதில் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும். 5 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் குலாம் ஹஸ்ரத் கூறும் போது அக்டாஷ் பகுதியில் ஆப்ரேஷன் தொடர்ந்து நடந்து வருவதாகவும், பாதுகாப்பு படையினர் தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply