ஸ்ரீநகரில் 7. 5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது

erthஜம்மு-காஷ்மீரில் இள்ள ஸ்ரீநகரில் இன்று பிற்பகல் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்பாக டெல்லியின் பலபகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.ஹிந்த்குஷ் பிராந்தியத்தை மையமாக வைத்து பிற்பகல் 2.30 மனீயளவில் ஸ்ரீநகரை உலுக்கிய இந்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் மற்றும் இழப்பு தொடர்பான முதல்கட்ட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியின் ஒஅக பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வால் சில வினாடிகளுக்கு கட்டிடங்கள் குலுங்கின. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியே ஓடிவந்து வீதி, சாலை போன்ற திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply