பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணம் தன்னிச்சையானது: அரசு வட்டாரங்கள் தகவல்

modiபிரதமர் மோடி ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பாகிஸ்தானுக்கு ‘திடீர்’ பயணம் மேற்கொண்டுள்ளார். லாகூர் சென்றடைந்த மோடி நவாஸ் செரீப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்துது கூறிய மோடி, இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாகவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் டுவிட் செய்துள்ளார்.

நவாஸ் ஷெரீபின் பேத்தி திருமண விழாவும் அதே மாளிகையில் தான் நடைபெறுகிறது. எனவே, திருமண நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணமானது அவரது தன்னிச்சையான முடிவு என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணம் தொடர்பாக இன்று காலைதான் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி காபூல் நகரில் இருந்து பறக்க தொடங்கிய போது இதுதொடர்பான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply