ஏமனில் பள்ளி மீது சவுதிஅரேபியா குண்டு வீச்சு: 10 குழந்தைகள் பலி

jemenஏமனில் கடந்த ஒரு ஆண்டாக உள் நாட்டு போர் நடைபெற்று வருகிறது. தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக் கொண்டு அதிபர் மன்சூர் ஹாதியை விரட்டியடித்தனர்.எனவே ஏமனில் தங்கியிருந்த போது அவரது அரண்மனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே, பதவியை ராஜினாமா செய்த அவர் சவுதிஅரேபியாவுக்கு தப்பி ஓடி தஞ்சம் அடைந்தார்.

அதை தொடர்ந்து அவருக்கு சவுதிஅரேபியா ஆதரவு அளித்து வருகிறது. அமெரிக்கா உதவியுடன் சவுதிஅரேபிய படைகள் அதிபர் ஹாதியின் ஆதரவு ராணுவத்துக்கு உதவி வருகின்றன.

இந்த நிலையில் ஹாதி கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் தலைநகர் சனா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்ற இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. எனவே நேற்று சனா அருகேயுள்ள ஹைடான் நகரம் மீது சவுதிஅரேபியாவின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின.

அதில், ஒரு குண்டு அங்குள்ள பள்ளி மீது விழுந்தது. அதில் அக்கட்டிடம் இடிந்து பலத்த சேதம் அடைந்தது. இத்தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகினர். 28 பேர் காயம் அடைந்தனர்.

குண்டு வீச்சு நடந்த பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது குண்டு வீசப்பட்டதில் குழந்தைகள் பலர் பலியாகினர். அவர்கள் 8 முதல் 15 வயது நிரம்பியவர்கள் ஆவர். ஹைடான் நகரில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அங்கு காயம் அடைந்த குழந்தைகளுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply