பாகிஸ்தான்: மசூதி மீது தற்கொலைப்படை தாக்குதல் – 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

pksஆப்கானிஸ்தான் நாட்டையொட்டியுள்ள பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் மொஹமன்ட் நகரின் அருகேயுள்ள காலனாய் என்ற பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புபடை தலைமையகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்திய நான்கு தற்கொலைப்படை தீவிரவாதிகள் அருகாமையில் உள்ள மசூதிக்குள் புகுந்தனர்.தற்கொலைப்படையினர் அணியும் மனித வெடிகுண்டு கவசங்களை அணிந்து வந்திருந்த தீவிரவாதிகளை கண்டவுடன் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியால் அலறியபடி ஓட்டம்பிடித்தனர்,

மசூதியின் முன்வாசலில் அந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் நான்கு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரு ராணுவ வீரர்களும் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply