ராணுவத்தின் குறி தவறிய தாக்குதலால் சொந்த வீரர்கள் 10 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவிரவாதிகளை குறிவைத்து ராணுவம் நடத்திய வான்வெளி ஒத்திகை தாக்குதலில் குறிதவறியதால் சொந்த வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மாராவி தீவு பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி கடந்த 8 நாட்களாக பொதுமக்கள் பலரை மனித கேடயங்களாக பிடித்து வைத்துள்ளனர். இவர்களை ஒடுக்குவதற்காக பிலிப்பைன்ஸ் ராணுவம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு ராணுவ நடவடிக்ககளுக்கான ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதேபோல் ஒரு ஒத்திகையில் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட சிறிய ரக ஏவுகணைகள் துரதிர்ஷ்டவசமாக குறிதவறி சொந்த வீரர்களின் நிலைகளை தாக்கியது. இந்த தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 8 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த மோசமான சம்பவத்திற்கு காரணம் என ராணுவ செயலாளர் டெல்பின் தெரிவித்துள்ளார். இந்த விபத்து சரியாக எந்த இடத்தில் நடந்தது என்பதையும் அவர் கூற மறுத்துவிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply