மின்சார தொடருந்து சேவை விரைவில் அறிமுகம்

இலங்கையில் மின்சார தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பானந்துரை, பொல்கஹவலை, கோட்டை, நீர்கொழும்பு, களனிவெளி பகுதிகளில் 158 கிலோ மீற்றர்களை கொண்ட தொடருந்து பாதைகளில் இந்த மின்சார புகையிரத சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்திற்காக 60 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply