பொலிஸ் மா அதிபர் விசேட பணிப்புரை

பொலிஸ் திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும் சகலவிதமான இடமாற்றங்களையும் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே குறித்த இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சகல இடமாற்றங்களும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply