புகையிரதத்தில் தலையை வைத்து ஒருவர் தற்கொலை

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காரியாலய புகையிரதம் ஒன்றிற்கு தலையை வைத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு 8.21 மணியளவில் சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்திலே இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் இளைஞர் ஒருவர் என்றும் அவருடைய தலை உடலை விட்டு பிரிந்து இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர் இல்லை எனவும் அவரை அடையாளம் தெரியாது எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

புகையிரத ஊழியர்களினால் சடலம் சிலாபம் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யார் என்பதனை அடையாளம் காண்பதற்கு விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply