அமெரிக்கா – வங்கியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலி
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்நாட்டில் எளிதில் துப்பாக்கி உரிமம் பெற முடியும் என்பதால், அங்குள்ள பெரும்பாலானவர்களிடம் துப்பாக்கி உள்ளது.இதனால், பெற்றோர்களின் துப்பாக்கியை தவறுதலாக சிறுவர்கள் பயன்படுத்துவதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்திரத்தில் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தும் கலாச்சாரம் அங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஒக்கிகோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தலைமை போலீஸ் அதிகாரி எலியட் ஐசக் கூறுகையில், ‘வங்கியில் இருந்த வாடிக்கையாளர்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தற்காப்புக்காக அவரை நோக்கி சுட்டத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே குண்டு அடிபட்டு உயிரிழந்தார்.
இதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply