பிரதமர் நீக்கம், பதவி ஏற்பு தொடர்பாக இரண்டு முக்கிய அரசாணையை வெளியிட்டார் அதிபர் சிறிசேனா
இலங்கை அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இலங்கை அரசில் இருந்து சிறிசேனா கட்சி விலகியது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் நான்தான் இலங்கை நாட்டின் பிரதமர். என்னை நீக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபருக்கு அதிகாரம் இல்லை. தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் என்று ரணில் விக்கரமசிங்கே அதிரடியான கூறினார்.
இந்நிலையில் இன்று அதிபர் சிறிசேனா இரண்டு முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளார். முதல் அரசாணையில் ரணில் விக்ரமசிங்கே நீக்கப்பட்டுள்ளார் என்றும், 2-வது அரசாணையில் ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குழப்பமான நிலை அதிகரித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply