நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் : ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு தனக்கு உரிமையுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள பெரும்பாலானோரின் ஆதரவு காணப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிரேஸ்ட அமைச்சர்களிடம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் வேட்பாளராக வந்ததன் பின்னர் தனது கூட்டத்தொடரில் பலவற்றை ஹம்பாந்தோட்டையிலிருந்து ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்ற தீர்மானத்தை மாற்றப் போவதில்லையெனவும் பிரதமர் கூறியுள்ளதாக அத்தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply