சோமரத்ன ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தல்

Wednesday, August 6th, 2025 at 6:38 (SLT)

செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாக மனைவியின் கடிதத்தின் ஊடாக தனது சகோதரரான சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருப்பதன் விளைவாக அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அவருக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சோமரத்ன ராஜபக்ஷவின் சகோதரி ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கால்வாயில் தவறி விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு

Wednesday, August 6th, 2025 at 6:32 (SLT)

பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், செவ்வாய்க்கிழமை (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை : அரசாங்கம் உறுதி

Wednesday, August 6th, 2025 at 6:29 (SLT)

அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Tuesday, August 5th, 2025 at 10:09 (SLT)

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

விஜித கூறிய சுற்றுலா வருவாய் தொடர்பில் பிரதி அமைச்சர் கூறிய கதை

Tuesday, August 5th, 2025 at 10:07 (SLT)

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தமை தொடர்பாக, சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க நேற்று (04) தெளிவுபடுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

யாழில். பற்றைக்காடொன்றில் இருந்து 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

Tuesday, August 5th, 2025 at 10:03 (SLT)

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 23 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , கட்டைக்காடு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் கடற்படையினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் 66 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் இளைஞர் கைது

Tuesday, August 5th, 2025 at 10:00 (SLT)

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக 33 வயது இளைஞர் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன்னர் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் உயர் பதவிகளில் அதிரடி மாற்றம்

Tuesday, August 5th, 2025 at 9:57 (SLT)

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனை : நாடாளுமன்றில் இன்று விவாதம்

Tuesday, August 5th, 2025 at 9:55 (SLT)

தேசபந்து தென்னகோனை, பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான யோசனையை நிறைவேற்றுவது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. 2002 ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் சட்டத்திற்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் இலங்கையில் கைது

Tuesday, August 5th, 2025 at 9:52 (SLT)

கொழும்பு – தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணம் அருகே மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Tuesday, August 5th, 2025 at 9:50 (SLT)

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் 728 துப்பாக்கி ரவைகளளுடன் இருவர் கைது

Monday, August 4th, 2025 at 11:19 (SLT)

கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு தேவை:எஸ்.எம்.மரிக்கார்

Monday, August 4th, 2025 at 11:14 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் சட்டத்தை இந்திய தேவைக்கேற்ப திருத்த முடியுமா? : விமல் வீரவன்ச கேள்வி

Monday, August 4th, 2025 at 11:10 (SLT)

இலங்கைக்கு டிஜிட்டல் அடையாள அட்டையை விநியோகிக்கும் கருத்திட்டத்துக்கு தரவு பாதுகாப்பு சட்டம் தடையாக இருப்பதாக இந்திய நிறுவனம் குறிப்பிட்டதை தொடர்ந்து அந்த சட்டத்தை திருத்தம் செய்யும் யோசனையை இன்றும் ஒருமாத காலத்துக்கு கொண்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்திய நிறுவனத்துக்கு வாக்குறுதியளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

10 வருடங்களுக்குப் பிறகு தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்

Monday, August 4th, 2025 at 11:02 (SLT)

10 வருடங்களுக்குப் பிறகு தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று (4) ஆரம்பமாகவுள்ளது. இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>