கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Monday, August 4th, 2025 at 10:59 (SLT)

மாரவில, முதுகடுவ கடற்கரையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 3.7 பில்லியன் டொலர் வருமானம்

Monday, August 4th, 2025 at 10:58 (SLT)

கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மலசலகூட குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

Monday, August 4th, 2025 at 10:55 (SLT)

பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் தமிழ்நாட்டில் இருவர் கைது

Sunday, August 3rd, 2025 at 10:57 (SLT)

தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று (2) மாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு : ஹரிணி அமரசூரிய

Sunday, August 3rd, 2025 at 10:52 (SLT)

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு பொறுப்பு என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 நபர்கள் கைது

Sunday, August 3rd, 2025 at 10:47 (SLT)

கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் நேற்று மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடியுள்ளதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் ஹரிணி நல்லூரில் விசேட வழிபாடு

Sunday, August 3rd, 2025 at 10:43 (SLT)

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

8 கிலோ குஷ் போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கைது

Sunday, August 3rd, 2025 at 8:04 (SLT)

8 கிலோ 220 கிராம் குஷ் போதைப்பொருளுடன் இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) இரவு விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

Sunday, August 3rd, 2025 at 8:01 (SLT)

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்

Saturday, August 2nd, 2025 at 23:04 (SLT)

பிரபல குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் தனது 71 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பால், ரசிகர்களை கவர்ந்தவர்.

மேலும் வாசிக்க >>>

ரஷ்ய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு

Saturday, August 2nd, 2025 at 13:00 (SLT)

ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஐரோப்பிய நாடொன்றில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறை இலங்கையர் மீது குற்றச்சாட்டு

Saturday, August 2nd, 2025 at 12:56 (SLT)

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 37 வயதான தினிர லியனகே என்பரே இந்த குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ். செம்மணி மயானத்திற்கு அருகாமையில் விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

Saturday, August 2nd, 2025 at 6:46 (SLT)

யாழ். செம்மணி மயானத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் வியாழக்கிழமை (31) உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கு மீசாலை பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணசாமி லிங்கேஸ்வரன் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க தீர்வை வரி 20% ஆக குறைப்பு : மேலும் 15% இலக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சஜித் பிரேமதாச

Saturday, August 2nd, 2025 at 6:42 (SLT)

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்காக அமெரிக்காவின் தீர்வை வரி 20 வீதமாக குறைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதுடன் அதனை மேலும் 15 வீதத்துக்கும் குறைவான இலக்காக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

Saturday, August 2nd, 2025 at 6:39 (SLT)

1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>