யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்

Wednesday, July 30th, 2025 at 10:47 (SLT)

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில் , இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய வன்முறை கும்பல் , இளைஞனை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

காசா போரை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் : பிரித்தானியா

Wednesday, July 30th, 2025 at 10:44 (SLT)

காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டு பிற நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், இங்கிலாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இந்த அறிவிப்பை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது, இது ஹமாஸுக்கு பரிசு அளிப்பதாகக் கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அநுர அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளதாக தோன்றவில்லை:சிவஞானம் ஸ்ரீதரன்

Wednesday, July 30th, 2025 at 10:41 (SLT)

இந்த அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து இருப்பதாக தோன்றவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

வடக்கு ஜப்பானை தாக்கியது முதல் சுனாமி பேரலைகள்

Wednesday, July 30th, 2025 at 10:37 (SLT)

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலை தாக்கியுள்ளது. இந்த சுனாமி அலை வடக்கு ஜப்பானில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரஷ்யாவை தாக்கிய 13 அடி உயர சுனாமி அலைகள்

Wednesday, July 30th, 2025 at 10:33 (SLT)

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ரோஹிதவின் மகள் பொலிஸில் சரண்

Wednesday, July 30th, 2025 at 10:28 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைவாக அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க எரிபொருள் நிறுவனத்துக்கு ஏகபோக உரிமை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறதா? : திஸ்ஸ அத்தநாயக்க

Wednesday, July 30th, 2025 at 6:26 (SLT)

அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதேநேரம் 30வீத தீர்வை வரியை குறைத்துக்கொள்ள முடியாமல் போனால் ஆடை தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய 3இலட்சம் பேர்வரை பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தவுமில்லை, மோசடி செய்யவுமில்லை : நாமல் ராஜபக்ஷ

Wednesday, July 30th, 2025 at 6:17 (SLT)

அரச சொத்துக்களை நாங்கள் முறைகேடாக பயன்படுத்தவுமில்லை,மோசடி செய்யவுமில்லை. நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது தரப்பு நியாயத்தை குறிப்பிட்டு நீதியை பெற்றுக்கொள்வோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ரம்புக்கனை – ஹதரலியத்த வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

Wednesday, July 30th, 2025 at 6:12 (SLT)

ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல என்ற பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு ஆளுநர் – சுவிட்சர்லாந்து தூதுவர் சந்திப்பு: வடக்கில் பின்தங்கிய கிராமங்கள் குறித்து விசேட கவனம்

Tuesday, July 29th, 2025 at 20:07 (SLT)

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவதே தமது இந்தப் பயணத்தின் நோக்கம் என தூதுவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு

Tuesday, July 29th, 2025 at 10:32 (SLT)

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார்.

மேலும் வாசிக்க >>>

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tuesday, July 29th, 2025 at 10:27 (SLT)

இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Tuesday, July 29th, 2025 at 10:23 (SLT)

நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

Tuesday, July 29th, 2025 at 10:20 (SLT)

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு

Tuesday, July 29th, 2025 at 10:14 (SLT)

பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் , 44 வயதுடைய அவரது மனைவி மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>