நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் : பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை

Friday, May 23rd, 2025 at 8:50 (SLT)

நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ராஜித , கெஹெலிய, தயாசிறி உள்ளிட்ட 12 பேரின் வங்கிக்கணக்குகளை ஆராய அனுமதி : கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம்

Friday, May 23rd, 2025 at 8:26 (SLT)

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 12 பேருடைய வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும் வாசிக்க >>>

பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை : இராமலிங்கம் சந்திரசேகர்

Friday, May 23rd, 2025 at 8:20 (SLT)

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நாட்டில் நல்லுறவை கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரசாரமாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஊழல்வாதிகளை சலவை செய்தா தேசிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்கிறார்கள் : இம்ரான் மஹரூப்

Thursday, May 22nd, 2025 at 10:57 (SLT)

தேசிய மக்கள் சக்தியின் பெயரை ‘தேசிய சலவை சக்தி’ என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். ஊழல்வாதிகளை சலவை செய்தா கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் : சஜித் எச்சரிக்கை

Thursday, May 22nd, 2025 at 10:53 (SLT)

ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர். 2028 முதல் கடனை அடைக்க தற்போது 5வீத பொருளாதார வளர்ச்சி விகிதம் எமக்கு தேவை. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் போது இந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமில்லை. இத்தகைய சூழ்நிலையில், நாம் 5வீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில், 2028 முதல் நமது கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவோம். இது நடந்தால், நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பழைமைவாய்ந்த மன்னார் – புத்தளம் சாலையை மூடுவதற்கான நீதிமன்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் : ரிஷாத் பதியுதீன்

Thursday, May 22nd, 2025 at 10:48 (SLT)

சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவியுடன் 100 வருடம் பழைமைவாய்ந்த மன்னார் புத்தளம் பாதையை மூடிவிடுவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது சட்டவிராேதமான நடவடிக்கையாகும். இந்த பாதை அம்பாந்தோட்டையிலோ வேறு பிரதேசங்களிலாே இருந்திருந்தால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த பாதைையை மூடிவிட உதவி செய்திருக்காது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது

Thursday, May 22nd, 2025 at 10:45 (SLT)

இலங்கையின் குடியரசு தினம் இன்றாகும். பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 வருடங்கள் நிறைவடைகிறது. 1815 ஆம் ஆண்டு, கண்டி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை பிரித்தானிய பேரரசுடன் இணைக்கப்பட்டது, அன்றிலிருந்து, நாட்டின் மீதான இறையாண்மை பிரித்தானிய பேரரசிடம் மாற்றப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மாநகரிலும் என்பிபி ஆட்சி மலரும் : வசந்த சமரசிங்க

Thursday, May 22nd, 2025 at 10:39 (SLT)

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி நிச்சயம் ஆட்சி அமைக்குமென வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விஜயம் அறிக்கை முன்வைக்கவும் ஏற்பாடு : அமைச்சர் விஜித ஹேரத்

Thursday, May 22nd, 2025 at 10:36 (SLT)

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மக்களை இன ரீதியாகப் பிளவுபடுத்தும் செயலுக்கு கனடா இடமளிக்ககூடாது : அமைச்சர் சந்திரசேகர்

Thursday, May 22nd, 2025 at 10:33 (SLT)

மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கைக்கான கனடா தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான கனடா எரிக் வால்ஷ் ஆகியோருக்கிடையில் நேற்று (21) கொழும்பிலுள்ள அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு : பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Wednesday, May 21st, 2025 at 10:08 (SLT)

பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள் : பிமல் ரத்நாயக்க

Wednesday, May 21st, 2025 at 10:06 (SLT)

தமிழ் மக்களின் காணிகளில் பிறிதொரு தரப்பினரை குடியேற்ற வேண்டிய தேவை எமக்கு கிடையாது. மஹிந்த மற்றும் ரணில் ஆகியோரை பார்த்த கோணத்தில் எங்களை பார்க்காதீர்கள், தேசிய நல்லிணக்கத்தை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். காணி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சும் கூட்டாக சமர்ப்பிக்கும் அமைச்சரவை பத்திரம் ஊடாக விசேட குழு ஒன்று நியமிக்கப்படும்.அதனூடாக காணி பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தம்பியை கொடூரமாக தாக்கிய அண்ணா

Wednesday, May 21st, 2025 at 10:03 (SLT)

பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டு, இளைய சககோதரர் ஏற்கனவே மூத்த சகோதரனை தாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழப்பு

Wednesday, May 21st, 2025 at 10:01 (SLT)

வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

உலகின் முதல் AI நகரம் அபுதாபியில்

Wednesday, May 21st, 2025 at 9:59 (SLT)

உலகின் முதல் AI நகரத்தை அபுதாபி உருவாக்கி வருகிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன், 2027 ஆம் ஆண்டில் இந்த நகரம் யதார்த்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவாற்றல் தொழில்நுட்பம் மூலம் நகர்ப்புற வாழ்க்கையை மறுவரையறை செய்யும் குறிக்கோளுடன் இந்த நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>