அநுரவிடம் இனவாதம் இல்லாவிட்டால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்குபற்றியிருக்க வேண்டும் : சபா குகதாஸ்

Wednesday, May 21st, 2025 at 9:56 (SLT)

ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் இனவாதமற்ற ஒரு அரசாங்கமாக இருந்தால், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எவ்வாறு யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கெடுத்தாரோ அதே போல அவர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுத்திருக்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கியுடன் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த பெண் கொழும்பில் பரபரப்பு

Wednesday, May 21st, 2025 at 9:53 (SLT)

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மிகவும் நூதனமான முறையில் போதைப் பொருள் கடத்தி வந்த மூன்று பெண்கள் விமான நிலையத்தில் கைது

Tuesday, May 20th, 2025 at 8:09 (SLT)

சுமார் 120 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் ரக போதைப் பொருளை மின்சார உபகரணங்களில் மறைத்து வைத்து கொண்டுவந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி

Tuesday, May 20th, 2025 at 8:07 (SLT)

அதிகார மோகமுடையவர்கள் வடக்கிலும், தெற்கிலும் மீண்டும் இனவாதத்தை தூண்ட ஆரம்பித்துள்ளனர். இனவாதம் தலைதூக்குவதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. காலத்துக்கு காலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தாம் செய்த குற்றங்களை மறைப்பதற்காகவும் யுத்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாதிக்கப்பட்டோரின் கதைகளை நாம் தொடர்ந்து பகிரவேண்டும் : ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம்

Tuesday, May 20th, 2025 at 8:04 (SLT)

தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஜனநாயக விரோதமானது : சம்பிக்க ரணவக்க

Tuesday, May 20th, 2025 at 8:00 (SLT)

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக ஸ்தாபிக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி முற்றிலும் தவறானது. ஜனநாயகத்துக்கு முரணானது. இந்த செயற்பாட்டில் நாங்கள் பங்காளியாக போவதில்லை. தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றப்பெற்ற அதிகார சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நோக்கம் இல்லை

Monday, May 19th, 2025 at 8:17 (SLT)

தனியார் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நில அளவை வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணவே தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனிற்கு புற்றுநோய்

Monday, May 19th, 2025 at 8:12 (SLT)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய் அவரது எலும்புகளிற்குள் பரவியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசபந்து இன்று விசாரணைக்குழு முன்னிலை

Monday, May 19th, 2025 at 8:08 (SLT)

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏழு கோடி மதிப்பு போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் கைது

Monday, May 19th, 2025 at 8:05 (SLT)

சுமார் 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று : பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

Monday, May 19th, 2025 at 8:02 (SLT)

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்

Sunday, May 18th, 2025 at 19:07 (SLT)

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

Sunday, May 18th, 2025 at 19:03 (SLT)

கொழும்பு 13, புளூமெண்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை : மஹிந்த ராஜபக்ஷ

Sunday, May 18th, 2025 at 19:00 (SLT)

நான் உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது குளவி கொட்டு

Sunday, May 18th, 2025 at 18:57 (SLT)

ஹப்புத்தளை, பிடரத்மலே தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் சனிக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>